அல்-குர்ஆன் சொல்லும் செய்திகள்
யாருடைய பாவத்திற்குப் பின்னணியில் மனோ இச்சை இருக்குமோ..
அவரிடத்தில் இருந்து நலவை எதிர்பார்க்க முடியும்.
யாருடைய பாவத்திற்குப் பின்னணியில் பெருமை இருக்குமோ..
அவனிடமிருந்து வரும் கெடுதிகளைப்
பயந்து கொள்ள வேண்டும்.
மனித உளவியலுக்கு நெருக்கமாக உரையாடும் இந் நூல் வாழ்க்கை பற்றிய புரிதலைச் சரிசெய்து கொள்வதற்கும் தன்னைச் சூழ நடக்கும் நெருக்கடிகளிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் வழிகாட்டுகிறது.
நம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களும் நிகழ்வுகளும் சிலபோது நம்மை ஆட்டம் காணச் செய்கின்றன. இதயத்தை சஞ்சலப்படுத்துகின்றன. பொய்களும், அநீதிகளும் கூட்டமாகவும் சப்தமாகவும் நம்மைப் பயம் கொள்ளச் செய்கின்றன. அவற்றுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதையும் அவற்றைப் பார்த்துச் சலிப்படையத் தேவையில்லை என்பதையும் வரலாற்று மனிதர்களின் உதாரணங்களுடன் சொல்கிறது இந் நூல்.
அவரவர் நம்பிக்கையும் வாழ்முறைமுறையும் ஆளுக்கு ஆள் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடும். இறைநம்பிக்கையாளனின் வாழ்வும் வாழ்க்கை முறையும் ஒரு நீண்ட பயணத்தின் தற்காலிகப் பகுதியே.
இந்தக்குறுகிய வாழ்க்கையும் பல்வேறு கவலைகளால் எம்மைத் துரத்தவே செய்கின்றன. இக் கவலைகளைத் தாண்டி எப்படிப் பயணிக்கலாம், எமது வாழ்வை எப்படிச் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அல் குர்ஆனின் தெரிவு செய்யப்பட்ட வசனங்களில் நூலாசிரியர் தரும் விளக்கம் ஆச்சரியமானவை. ஒரு சில இடங்கள் பொதுப்படையான விளக்கமாக இருந்தாலும் பல இடங்களில் ஆழ்ந்து சிந்திப்பதற்கும் சுயவிசாரணைக்கும் நம்மை அழைத்துச் செல்லும் எழுத்துக்கள் இவை.
ஒரு நல்ல வார்த்தை தரும் உற்சாகம் புதுத்தெம்புடன் எம்மை இயங்கச் செய்வது போல, நல்ல பல வார்த்தைகளால் எம் வாழ்க்கையைப் புதுப்பிக்கும் சக்தி கொண்டது இந் இந்நூல்.
இதிலுள்ள பெரும்பாலான வசனங்களை ஒரே மூச்சில் படிப்பதை விட ஒவ்வொரு வசனமாக, கால நேரம் எடுத்துப் படிப்பதும் அதனைச் சிந்திப்பதும் ஒரு செயலாகச் செய்ய வேண்டியதாகவே தோன்றுகிறது.









Reviews
There are no reviews yet.