பாதையின் இடையே…
பிலாலி அவர்களின் இஸ்லாமிய அழைப்புப் பணியின் ஒளியில் எழுதப்பட்ட அவர்களது உணர்வு சார் அனுபவங்களை மிகச் சிறப்பாக எடுத்து விளக்கி, அத்தோடு இஸ்லாமிய அழைப்பாளனுக்கு மிக அவசியமான வழிகாட்டல்களைக் கொண்டுள்ள இந்த நூலை அஷ்ஷெய்க் ஜே.இம்தியாஸ் (நளீமி) அவர்கள் மூலத்தின் சுவை குன்றாது தமிழில் பெயர்த்திருப்பது மிக வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
அஷ்ஷெய்க் இம்தியாஸ் ஏற்கனவெ இஸ்லாமிய சிந்தனையில் மொழிபெயர்த்துள்ள சில கட்டுரைகளில் இத்துறையில் அவரது ஆற்றல்களையும் திறமையையும் அவதானித்துள்ளேன். அறபு மொழியில் காணப்படும் இத்தகைய நூல்களை தனது அறபு, தமிழ் மொழிப் புலமையைப் பயன்படுத்தி அவர் மொழிபெயர்த்திருப்பது மிக வரவேற்கத்தக்க ஒரு பணியாக அமையும். அல்லாஹ் நூலாசிரியரினதும் மொழிபெயர்ப்பாளரிதும் முயற்சியை அங்கீகரிப்பானாக..
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி (ரஹ்)


Reviews
There are no reviews yet.